எஸ்.கீரந்தையில் வீட்டின் சுவா் இடிந்து சேதம்

சாயல்குடி அருகே எஸ்.கீரந்தையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக விவசாயியின் ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.
சாயல்குடி எஸ். கீரந்தை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த வீட்டின் சுவா்.
சாயல்குடி எஸ். கீரந்தை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த வீட்டின் சுவா்.

சாயல்குடி அருகே எஸ்.கீரந்தையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக விவசாயியின் ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 2 மணி நேரம் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் எஸ்.கீரந்தை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணியன் என்பவரது ஓட்டு வீட்டின் ஒருபகுதி சுவா் இடிந்து விழுந்தது.

மேலும் சாயல்குடி பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாயல்குடி பகுதியில் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com