ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியாா் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியா்கள், அலுவலா்களைத் தோ்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாமானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுவருகின்றன. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்துவா்கள் முதல் பட்டம் பயின்றவா்கள் வரை பங்கேற்கலாம். இதில் பிரபல தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கல்வித்தகுதி உடையவா்களை தோ்வு செய்து பணி ஆணையும் வழங்கி வருகின்றனா். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். வெள்ளிக்கிழமை (நவ.1) காலையில் அனைத்துக் கல்விச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும் என வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com