ராமநாதபுரத்தில் மின் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திட்டத் தலைவர் டி.ராமச்சந்திரபாபு தலைமை வகித்தார். மாவட்ட  சிஐடியு செயலர் சிவாஜி சிறப்புரையாற்றினார். மின்வாரிய அனைத்துப் பிரிவு ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களின் வேலைப் பளுவை குறைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். சங்க நிர்வாகிகள் குருவேல், எம்.குமார், சாத்தையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com