ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் சனிக்கிழமை (செப்.14) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு விவரம்: மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில், செப்டம்பர் மாத குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் கிராமங்கள் விவரம்: ராமநாதபுரம் வட்டம் முடிவீரன்பட்டிணம், ராமேசுவரம் வட்டம் ராமேசுவரம், திருவாடானை வட்டம் என்.எம்.மங்கலம், பரமக்குடி வட்டம் தெளிச்சாத்தநல்லூர், முதுகுளத்தூர் வட்டம் கொளுந்துரை.
கடலாடி வட்டம் பி.கீரந்தை, கமுதி வட்டம் மண்டலமாணிக்கம், கீழக்கரை வட்டம் பெரியபட்டிணம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் செங்குடி ஆகிய கிராமங்களில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் பொதுவிநியோகத் திட்டம் சம்பந்தமான தங்களின் குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வரும் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு குறைதீர் முகாமில் மனுக்களை அளிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.