முதுகுளத்தூர் அருகே விபத்து: இளைஞர் பலி

முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த காசி மகன் திருமுருகன் (24). இவர் வியாழக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் பொசுக்குடியில் இருந்து மீசல் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே  திருமுருகன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com