ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.13) மின் விநியோகம் தடைபடும்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மரைக்காயர் பட்டணம், வேதாளை, சுந்தரமுடையான் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.