பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, அனுமதியின்றியும் விளம்பரபதாகை வைத்த 19 பேர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பரமக்குடியில் செப்டம்பர் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரனின் 62-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பரமக்குடி ஐந்துமுனைப் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி, போலீஸார் அனுமதியின்றி விளம்பரபதாகைகள் வைத்ததாக, சுரேஷ், மனோகரன், முருகேசன், சண்முகம், சேகர், ராஜமனோகரன், ராம்கி, தனுஷ்கொடி, நாகநாதன், முத்துக்கண்ணன் உள்பட 19 பேர் மற்றும் சிலர் மீது, பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.