ஆர்.எஸ்.மங்கலத்தில் பலத்த மழை:மின்னல் தாக்கி இளைஞர் பலி

 ராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ். மங்கலத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் போது, மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். 


 ராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ். மங்கலத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் போது, மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். 
திருவாடானை அருகே ஆர்.எஸ்.மங்கலம் பகுதியான வண்டல், வரவணி, சனவேலி, அடர்ந்தனக்கோட்டை, மங்கலம், தும்படாகோட்டை, சோழந்தூர், திருத்தேர்வலை, கூடலூர், நத்த கோட்டை,செங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 
இதனால் கண்மாய்கள், குளங்கள்,  வயல்வெளி பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அடர்ந்தனக்கோட்டை பகுதியில் இடியுடன் கூடிய  பலத்த மழை பெய்தது. அப்போது வயல்வெளியில் இருந்த  மாடுகளை அவிழத்து விடுவதற்காக அதே ஊரைச் சேர்ந்த பிரசாத் (27) என்பவர் சென்றுள்ளார். அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com