கமுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன.அதைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இம் மழை மாலை 4 மணி வரை பலமாகக் கொட்டியது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தரை குளிர்ந்து, நிலத்தடி நீர் அதிகரிப்பதுடன், வேளாண் பணிகளை மேற் கொள்ள வாய்ப்பாக இந்த மழை பெய்துள்ளதாக கமுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.