துணை சுகாதார நிலைய செவிலியரை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சி

திருவாடானை அருகே  அரசு துணை சுகாதார நிலைய செவிலியரை தாக்கி இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.


திருவாடானை அருகே  அரசு துணை சுகாதார நிலைய செவிலியரை தாக்கி இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
திருவாடானை அருகே அரசூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக திருப்பூர் அவிநாசி எஸ்வி காலனியை சேர்ந்த லூர்து சேவியர் மனைவி ஜெனிட்டா மேரி (30) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளார். தனக்கு காலில் அடிபட்டு உள்ளதாக கூறி சிகிச்சைக்காக வந்ததாகக் கூறினாராம். மேலும் அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை திருவாடானை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற செல்லுமாறு ஜெனிட்டாமேரி கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அந்த இளைஞர் ஜெனிட்டாமேரியை பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் ஜெனிட்டாமேரியின் செல்லிடப்பேசியையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக ஜெனிட்டாமேரி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த இளைஞர்,  அதே பகுதியை சேர்ந்த காளியம்மாள் மகன் பிரசாத் (26) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவான இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com