முதுகுளத்தூரில் அனும தியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தி.ராஜேஷ் உத்தரவின் பேரில் சார்பு-ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் கடலாடி விலக்கு சாலையில் இருந்து சாலையோரங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த விளம்பரப் பதாகைகளையும், போஸ்டர்களையும் அகற்றினர்.