மாநில தணிக்கையாளர் பணிமாறுதலை கண்டித்து, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், ஊரக வளர்ச்சித் துறையின் மாநில தணிக்கையாளர் மற்றும் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகிலிருந்து திருவண்ணாமலைக்கு மாவட்ட மாறுதல் செய்யப்பட்டார்.
உரிய காரணமின்றி இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், அவரது இடமாறுதலை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.