கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமுதி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கமுதி கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கமுதி நகர், அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்கப்படை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.