கடலாடி வட்டம் சிக்கல் கிராமத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு உள்ள சிவ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு குருநாதர் நாகரத்தினம் தலைமை வகித்தார். சற்குருநாதர்கள், முத்துராமலிங்கம், முனியாண்டி, கோவிந்தராஜ், செல்லத்துரை, முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம் சாயல்குடி கிளை சார்பில் நடத்தப்பட்டு அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள50 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.