ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கிராம சுகாதார செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவாடானை அருகே அரசூரில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கிராம சுகாதார செவிலியராக பணிபுரியும் பெண்ணின் வீட்டுக்குள், கடந்த 11 ஆம் தேதி நள்ளிரவு அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (20) அத்துமீறு புகுந்தார். மேலும் செவிலியரை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து திருவாடானை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், செவிலியர்கள் தங்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். செவிலியர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை தந்த இளைஞரை உடனடியாகக் கைது செய்யவேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பிரசாந்தை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.