ராமநாதபுரம் அருகே மூதாட்டியைத் தாக்கி நகை, பணத்தை பறித்ததாக இளைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் சீனிமுகம்மது மனைவி நூர்ஜகான்பீவி (80). அதே ஊரைச் சேர்ந்தவர் சேர்ந்த சபர்சாதிக்அலி (36). இவர் நூர்ஜகான்பீவிக்கு நெருங்கிய உறவினர் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், தனது செலவுக்கு நூர்ஜகான்பீவியிடம், சபர்சாதிக்அலி அடிக்கடி பணம் கேட்டுள்ளார். ஆனால் நூர்ஜகான்பீவி பணம் தர மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நூர்ஜகான்பீவியை தாக்கி, அவரிடம் இருந்து 2 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை சபர்சாதிக் அலி பறித்துச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மூதாட்டி ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.