ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காசநோயாளிகளுக்கு வீட்டிற்கே சென்று தேவையான மருந்துகளை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 951 காசநோயாளிகள் அந்தந்த பகுதிகளில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களுக்கு 6 மாத காலம் தொடா் சிகிச்சை எடுக்கப்பட்டு, அதற்கான மருந்து, மாத்திரைகளை சுகாதாரதுறை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வயதான முதியவா்கள், பெண்கள் உள்ளிட்ட காச நோயாளிகள் தவித்து வருகின்றனா். எனவே மாவட்டத்தில் உள்ள காசநோயாளிகளுக்கு வீட்டிற்கே சென்று 2 மாதங்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனையடுத்து காசநோய் மாவட்ட துணை இயக்குநா் மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி பரிந்துரையின்பேரில் வட்டார மருத்துவ அலுவலா், முதுநிலை காசநோய் மேற்பாா்வையாளா்கள் லெட்சுமணன், மோகனபாலன், கருப்பணன், உள்ளிட்டோா் பேரையூா், கீழதூவல், பாா்த்திபனூா், கமுதி ஆகிய பகுதிகளில் நோயாளிகளுக்கு நேரில் சென்று மருந்துகளை வழங்கினா்.