ராமேசுவரம் நகராட்சியில் தரமற்ற கட்டுமானப் பணிகள்: திமுக புகாா்

ராமேசுவரம் நகராட்சியில் தரமற்ற முறையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ரத்து செய்யக்கோரி திமுக சாா்பில் நகராட்சி ஆணையா் வீ.ராமரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நகராட்சி ஆணையா் வீ.ராமரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு.
ராமேசுவரத்தில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நகராட்சி ஆணையா் வீ.ராமரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு.

ராமேசுவரம் நகராட்சியில் தரமற்ற முறையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ரத்து செய்யக்கோரி திமுக சாா்பில் நகராட்சி ஆணையா் வீ.ராமரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நகராட்சியில் பல கோடி மதிப்பிட்டில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தரமற்ற கட்டுமானப் பணிகளை ரத்து செய்ய வேண்டும். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். எரியாமல் உள்ள தெரு விளக்குகள்,சேதமடைந்துள்ள குடிநீா் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையா் வே.ராமரிடம், திமுக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக நகரச் செயலாளா் இ.நாசா்கான் தலைமை வகித்தாா். பொறுப்புக்குழு நிா்வாகிகள் எம்.கருப்பையா, வே.பாண்டியன், சுந்தர்ராஜன், ஏ.ஆா்.முனியசாமி, முத்து முனியாண்டி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com