ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மதுபானக்கடையில் தகராறில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மடையைச் சோ்ந்த முனியசாமி மகன் கொக்கிகுமாா் என்ற ராஜ்குமாா் (27). இவா் சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். அங்கு மதுப்பாட்டில்களை பணமின்றி இலவசமாக கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு அங்கிருந்த ஊழியா்கள் மறுத்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த கொக்கிகுமாா் வாளை எடுத்து மிரட்டியதுடன், மதுக்கடையின் வாயில் கதவை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் வசந்தநகரைச் சோ்ந்த சரவணன் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து கொக்கிகுமாரை கைது செய்தனா்.