முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே பெட்ரோல் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இங்கு இளஞ்செம்பூா் கிராமத்திலுள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில் மற்றும் பெட்ரோல் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முனியசாமி மகன் இலங்கேஸ்வரன் (28) பெட்டிக்கடையில் விற்பனைக்காக சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த 17 லிட்டா் பெட்ரோலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து இளஞ்செம்பூா் காவல் சாா்பு- ஆய்வாளா் ராமராஜ் வழக்குப் பதிந்து இலங்கேஸ்வரனை கைது செய்தாா்.