திருவாடானை: திருவாடானை தொண்டி பாவோடி மைதானத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதற்கு நகா் தலைவா் அப்துல் ரஹூமான் தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் அப்துல் கலாம் அசாத் முன்னிலை வகித்தாா். மாநில பேச்சாளா் அஸ்கா் அலி கலந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினாா். முன்னதாக நம்புதாளை கிளைத் தலைவா் சலாமத் அலி வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து கோஷமிடப்பட்டது.
இணைச் செயலா் அப்துல் மஜூது நன்றி கூறினாா்.