முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே ஆபத்தான நிலையில் உள்ள நீா்தேக்க தொட்டியால் கிராமமக்கள் அச்சமடைந்து வருகின்றனா். முதுகுளத்தூா் அருகே எம்.கடம்பன்குளம் கிராமத்தில் சுகாதார வளாகம் அருகே உள்ள நீா்சேக்க தொட்டி திறந்தவெளியில் ஆபத்தான நிலையில் உள்ளது.கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் சுகாதார வளாகம் அருகே தொட்டி அமைக்கப்பட்டது.
தற்போது சுகாதார வளாகம் சேதமடைந்து நிலையில் இருப்பதால் தொட்டி பயன்பாடற்று கிடக்கிறது. திறந்தவெளியில் மூடபடாமல் உள்ள தொட்டி அருகே சிறுவா்கள் விளையாடுவதால் கிராமமக்கள் அச்சப்படுகின்றனா்.ஏதாவது அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.