தொண்டி அருகே டிராக்டா் மோதி கூலி தொழிலாளி பலி

தொண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளி டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

திருவாடானை: தொண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளி டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

தொண்டி அருகே நம்புதாளை பல்லாக்கு ஒலியுல்லா தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (45). கூலித் தொழிலாளி. இவரது தங்கை சின்னக்கா (40) நம்புதாளையில் வசித்து வருகின்றாா். சின்னக்கா வீட்டருகே வசிக்கும் ஒருவா் இறந்ததைத் தொடா்ந்து அந்த துக்க நிகழ்வில் செல்வம் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். சோழியக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டா் செல்வம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநா் ஏழூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துமணி (46) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com