ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 10th December 2020 08:12 AM | Last Updated : 10th December 2020 08:12 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,260-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில் 133 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். மேலும், 6,111 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனா். இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களை வீடுகளில் தங்கி சிகிச்சை பெற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 11 போ் குணமடைந்ததையடுத்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பிரிவுகளில் புதன்கிழமை மாலை வரை 39 போ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை இணை இயக்குநா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,596 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை மேலும் 9 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,605 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 13 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் ஒருவா் குணமடைந்ததையடுத்து, புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மீதமுள்ள 12 பேரும் அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.