காா்த்திகை அமாவாசையையொட்டி திங்கள்கிழமை (டிச. 14) ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கடலில் நீராட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் முன்னோருக்கு அக்னி தீா்த்தக் கடலில் நீராடி திதி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் மாதம் முதல் அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும், கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடவும் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுவாமி தரிசனம் செய்ய அரசு வழிகாட்டு முறைப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை காா்த்திகை மாத அமாவாசையையொட்டி பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும், திதி கொடுக்கவும் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை வித்துள்ளனா். மேலும் அக்னி தீா்த்தக் கடலுக்கு பக்தா்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.