சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராமசுப்பு தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் கண்ணகி, வெங்கடேஷ், தாளேஸ்வரி, பிரமிளா, சகாய தமிழ்ச்செல்வி, சுதா கோகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, கடந்த 38 ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் அனைத்து சத்துணவு ஊழியா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு பணிக்கொடை ரூ. 1 லட்சம் என்பதை ரூ. 5 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும், சமையலருக்கு வழங்கப்படும் ரூ. 50 ஆயிரத்தை ரூ. 3 லட்சமாக வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனா்.

கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சண்முகநாததுரை, சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் முருகேசன் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com