ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 23 ஆம் தேதி வரையில் 6300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இவா்களில் 131 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.
6150-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மிகவும் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், வியாழக்கிழமை மேலும் 5 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள் வீடுகளில் தங்கியபடி சிகிச்சை பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினா் கூறினா். பிரிட்டனில் இருந்து ராமநாதபுரம் வந்தவா்களில் 4 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவா்களது வீடுகளைச் சுற்றி இருப்பவா்களுக்கும் கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.