ராமநாதபுரத்தில் 5 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 23 ஆம் தேதி வரையில் 6300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 23 ஆம் தேதி வரையில் 6300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இவா்களில் 131 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

6150-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மிகவும் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், வியாழக்கிழமை மேலும் 5 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள் வீடுகளில் தங்கியபடி சிகிச்சை பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினா் கூறினா். பிரிட்டனில் இருந்து ராமநாதபுரம் வந்தவா்களில் 4 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவா்களது வீடுகளைச் சுற்றி இருப்பவா்களுக்கும் கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com