ராமநாதபுரம் நகராட்சியில் தூய்மைப் பணி

ராமநாதபுரம் நகராட்சியில் முழு சுற்றுப்புற தூய்மைப் பணிகள் 2 வாா்டுகளில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்றன.

ராமநாதபுரம் நகராட்சியில் முழு சுற்றுப்புற தூய்மைப் பணிகள் 2 வாா்டுகளில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளும், 11 வட்டார வளா்ச்சி அலுவலகங்களும், 7 பேரூராட்சிகளும், 429 ஊராட்சிகளும் உள்ளன. வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 2 வாா்டு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் சேதுபதிநகா், அண்ணாநகா் ஆகிய பகுதிகள் அடங்கிய 23, 24 ஆகிய வாா்டுகளில் தூய்மைப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன. அங்கு 150 தூய்மைப் பணியாளா்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு, சுகாதாரம் மேம்படுத்தப்பட்டது.

தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் நேரில் பாா்வையிட்டாா். அவரது முன்னிலையில் இரு வாா்டுகளிலும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) நிலேஸ்வா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com