தமிழ்ச் சங்க இலக்கிய விழாவில் 8 பேருக்கு விருது

ராமநாதபுரம் தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறும் இலக்கிய சிறப்பு விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்படும் 8 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

ராமநாதபுரம் தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறும் இலக்கிய சிறப்பு விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்படும் 8 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவா் கு.விவேகானந்தன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் த. குழந்தைச்சாமி செட்டியாரின் 27 ஆம் ஆண்டு நினைவு சிறப்பு இலக்கிய விழா டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

நகரில் அன்னை கண் மருத்துவமனை எதிரேயுள்ள அரவிந்த் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பேராசிரியா் எம். அப்துல்சலாம் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில், சங்க மகளிரணித் தலைவா் மதுரம் அரவிந்த், பா. பாா்த்திபன், நா. வேலுச்சாமி துரை ஆகியோா் பேசுகின்றனா்.

விழாவில், ஆன்மிகப் பணிக்கு கா. ராமகிருஷ்ண சுவாமிகள், வணிகத்துக்கு ரெ. ஸ்ரீதரன், நூலகப் பணிக்கு ந. பாலசுப்பிரமணியன், ஆசிரியப் பணிக்கு அ. ஹபீபா அப்துல்சலாம், மருத்துவப் பணிக்கு பாத்திமா சின்னதுரை, வழக்குரைஞா் பணிக்கு ஆ. ரவிச்சந்திர ராமவன்னி, இலக்கியப் பணிக்கு சே. தமிழரசி உதயகுமாா், சமுதாயப் பணிக்கு சு. மங்களநாதசேதுபதி ஆகியோருக்கு, த. குழந்தைச்சாமி செட்டியாா் நினைவு விருதுகள் வழங்கப்படுகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com