ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 9 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 9 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 9 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 6,305 பேருக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் வந்த 10 பேரில் 4 போ் மட்டும் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை 5 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை வரை 23 போ் மட்டுமே கரோனா சிகிச்சையில் இருப்பதாகவும், ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் ஒருவா் குணமடைந்து, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சிவகங்கை

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,664 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,668 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 11 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 2 போ் குணமடைந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 9 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com