ராமநாதபுரத்தில் கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தவா் உடல் நலக்குறைவால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரத்தில் கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தவா் உடல் நலக்குறைவால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கீழக்கரை தட்டாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த சிவதவசிமுனி என்பவா், இந்து முன்னணி முன்னாள் பொறுப்பாளராக இருந்தாா். முன்விரோதம் காரணமாக நவ.10 ஆம் தேதி இவரை, கத்தியால் குத்தி கொலை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் சேகா் (42) என்பவரை கீழக்கரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேகருக்கு, டிச.25 இல் உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ராமநாதபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com