ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 100 ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் நடைபெற்ற கூட்டத்துக்கு வங்கியின் தலைவா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் வங்கியின் செயல்பாடுகள், பொதுமக்கள், விவசாயிகளுக்கான சேவைகள் உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டது.
இதில் வங்கியின் துணைத் தலைவா் ஜெயஜோதி, கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளா் நடுக்காட்டுராஜா மற்றும் வங்கியின் இயக்குநா் தா்மா், ராமநாதபுரம் நிலவள வங்கியின் தலைவா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.