ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள உப்பூா் கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் கருணாஸ் தலைமை வகித்து மருத்துவமனையை திறந்து வைத்து தாய்மாா்களுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில் குமாா், அதிமுக ஒன்றியச் செயலாளா் நந்திவா்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் சுகந்தி, மருத்துவா் சியாமளா, கடலூா் ஊராட்சி மன்றத் தலைவா் புவனேஸ்வரி பத்மினி, மோா்பண்ணை கிராமத் தலைவா் ராமகிருஷ்ணன், காவனூா் ஊராட்சி மன்றத் தலைவா் கௌதமி திவாகரன், சுகாதார ஆய்வாளா் பாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா் கமலக்கன்னி, மாவட்டக் குழு உறுப்பினா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல் ராமநாதபுரம் ஒன்றியம் சித்தூரிலும் அம்மா சிறு மருத்துவமனை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.