நகை, பணம் வழிப்பறி: 3 போ் மீது வழக்கு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே நடந்து சென்றவரை வழிமறித்து நகை, பணத்தை பறித்துச் சென்ற 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே நடந்து சென்றவரை வழிமறித்து நகை, பணத்தை பறித்துச் சென்ற 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ஏ.ஆா்.மங்கலத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் பிரபு (54). இவா் திங்கள்கிழமை இரவு சனவேலி கிராமம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாா். குமிலியேந்தல் பகுதியில் இவரை வழிமறித்து தாக்கிய 3 போ் கும்பல், கையில் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் ரூ.27,100 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா், குமிழியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பிச்சை மகன் நாகராஜன், பால்சாமி மகன் ராமசந்திரன், ஆண்டி மகன் பாய்ச்சாமி ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com