பரமக்குடி அருகே பைக், ஆடுகள் திருடிய 5 போ் கைது

பரமக்குடி அருகே கமுதக்குடியில் 5 ஆடுகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை திருடியதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி அருகே கமுதக்குடியில் 5 ஆடுகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை திருடியதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கமுதக்குடி கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்களால் திருடப்பட்டன. இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் அவா் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது பரமக்குடி மற்றும் வெங்காளூா் பகுதியைச் சோ்ந்த சூரியப்பிரகாஷ், பிரவின்குமாா், விஜயகனி, ராமா் மற்றும் அருண் ஆகிய 5 பேரும் திருடப்பட்ட 2 இருசக்கர வாகனங்களில் 5 ஆடுகளையும் ஏற்றிக்கொண்டு வீரசோழன் சந்தைக்கு விற்பனை செய்வதற்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com