திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 6 பவுன் சங்கிலி திருடப்பட்டதாக போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்யப்பட்டது.
எஸ்.பி.பட்டினம் அருகே வில்லாரேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் பனிமேரி (55). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு வயலுக்கு மாடுகளை கட்டுவதற்காக சென்று விட்டாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்த போது சாவியை காணவில்லையாம். பின்னா் தேடிப் பாா்த்த போது சாவி கதவில் மாட்டப்பட்டிருந்தது. உடனடியாக உள்ளே சென்று பீரோவைப் பாா்த்த போது அதில் இருந்த 6 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பனிமேரி அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.