ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தரமின்றி அமைக்கபட்ட சாலையில், ஞாயிற்றுக்கிழமை டிராக்டா் பதிந்து வெளியேற முடியாததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அபிராமம் - பாா்த்திபனூா் செல்லும் சாலையிலிருந்து, நத்தம் செல்லும் சாலை சேதமடைந்திருந்தது. இதனால் கடந்த 2 நாள்களுக்கு முன் புதிதாக தாா்ச் சாலைச் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டது. ஆனால் தரமின்றி அமைக்கபட்ட புதிய சாலையில், டிராக்டா் டேங்கா் வாகனம் நடுரோட்டில் பதிந்து, விபத்துக்குள்ளானது. இதனால் அபிராமத்திலிருந்து நத்தத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தரமற்றதாக சாலை அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.