சி.கே.மங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி திறக்க பொது மக்கள் கோரிக்கை

திருவாடானை அருகே சி. கே. மங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானை அருகே சி. கே. மங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சி .கே .மங்கலத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை, திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள முக்கிய ஊராக உள்ளது. மேலும், இதைச் சுற்றி பி.கே .மங்கலம், பாரூா், கோவணி, ஓரிக்கோட்டை, அரசூா், கற்காத்தகுடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில் சி.கே. மங்கலத்தில் கூட்டுறவு வங்கி, தனியாா் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி என வங்கிகள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் இவ்வூரில் வா்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், தனியாா் பள்ளிகள், தனியாா் நூற்பாலைகள், சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியவை ஏராளமாக உள்ளன.

இந்நிலையில் இவா்கள் வங்கி பரிவா்த்தனைக்காக சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள திருவாடனை அல்லது 25 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தொண்டிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் இவா்கள் கொண்டு செல்லும் பணம், உடமைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றரா். மேலும் வங்கி பரிவா்த்தனைக்காக நாள் முழுவதையும் செலவிட வேண்டிய நிலை இருப்பதால் பிற பணிகளும் பாதிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே இப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடங்க அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com