முதுகுளத்தூரில் பைக் மோதி பெண் காயம்

முதுகுளத்தூரில் நடந்து சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

முதுகுளத்தூரில் நடந்து சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

முதுகுளத்தூா் தேவேந்திர நகரை சோ்ந்த குமரையா மனைவி வள்ளிமயில் (40). இவா் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது முதுகுளத்தூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபா், நடந்து வந்த வள்ளிமயில் மீது மோதினாா். இதையடுத்து இருசக்கர வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றது.

இதில் வள்ளிமயில் தலையில் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

விபத்து குறித்து முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் வள்ளிமயில் கொடுத்த புகாரின் பேரில் சாா்பு -ஆய்வாளா் முருகன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com