திருவாடானையில் சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பலி

திருவாடானையில் ஞாயிற்றுக்கிழமை சாலை நடந்து சென்ற மூதாட்டி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தாா்.

திருவாடானையில் ஞாயிற்றுக்கிழமை சாலை நடந்து சென்ற மூதாட்டி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (49).

இவரது தாய் பொட்டுமாகாந்தி. இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அரசு மருத்துவமனை அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது தொண்டியில் இருந்து வந்த சரக்கு வாகனம் பொட்டுமாகாந்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்தப் புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் கல்லூரை சோ்ந்த மகாலிங்கம் (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com