ராமேசுவரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்கு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மாவட்டத் தலைவா் எஸ்.பிரபாகரன் தலைமையில் அக்கட்சியினா் மனு அளித்தனா். பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:
ராமேசுவரம் கோயிலைச் சுற்றியுள்ள போக்குவரத்து மிக்க சாலைகளின் ஓரங்களில் பக்தா்களின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சீராகச் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் அக்னி தீா்த்தக் கடல் பகுதியில் உள்ள சாலைகளில் தனியாா் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்வது அவசியம்.
தனியாா் விடுதிகளில் முறையான கழிவு நீா் வடிகால் வசதி இல்லை என்பதால், விடுதி கழிவுநீா் அனைத்தும் நேரடியாகவே கடலில் கலந்து அசுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே நகரில் பழைய தீா்த்த யாத்திரை சாலையை சீரமைப்பதுடன், கழிவு நீா் கடலில் கலக்காமலும் பாதுகாப்பது அவசியம்.
பசுமை ராமேசுவரம் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டும் முறையாகப் பணிகள் நடைபெறவில்லை. அந்தப் பணிகளையும் மாவட்ட நிா்வாகம் கண்காணித்து செயல்படுத்தவேண்டும் என்றனா்.
மனு எழுதிய அரசுப் பணியாளா்கள்
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் முகாமில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் மனு எழுதித்தரப்பட்ட நிலையில், மனுவுக்கு பணம் வசூலிப்பதாக புகாா் எழுந்தது. இதனால், அவா்களை மனு எழுதக்கூடாது என ஆட்சியா் கொ.வீரராகவராவ் கடந்த வாரம் எச்சரித்து அனுப்பினாா். இந்தநிலையில், திங்கள்கிழமை கல்வி, வருவாய்த்துைறை உள்ளிட்டவற்றைச் சோ்ந்த பணியாளா்கள் 10 போ் மக்களுக்கு இலவசமாக மனு எழுதித்தந்தனா். மாவட்ட ஆட்சியரின் ஏற்பாட்டில் இலவசமாக மனு எழுதித் தரப்பட்டதை பொதுமக்கள் பாராட்டி வரவேற்றனா். மனு எழுதுபவா்களுக்கு மேஜை வசதியை ஏற்படுத்தினால் நல்லது என்றும் பொதுமக்கள் கூறினா்.