ராமநாதபுரம் மாவட்ட சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில், ஆசிரியா்களுக்கான சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலா் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் காஜாமுகைதீன் முன்னிலை வகித்தாா். மாவட்ட சாலைப் பாதுகாப்பு மன்ற அலுவலா் பாலமுருகன் பயிற்சி நோக்கத்தை விளக்கினாா்.
மருத்துவா் பரணிகுமாா் சாலை விபத்துகளின் போது மேற்கொள்ளவேண்டிய முதலுதவி குறித்து உரையாற்றினாா்.
சாலைகளில் செல்வோா் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து காவலா்கள் பாலமுருகன், ரமேஷ் ஆகியோா் பேசினா். ரத்த தானம் குறித்து அய்யப்பன் விளக்கினாா்.
இதில், சாலை பாதுகாப்பு மன்ற அலுவலா்கள் பரமக்குடி சத்தியேந்திரன், ராமநாதபுரம் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மண்டபம் கல்வி மாவட்ட சாலைப் பாதுகாப்பு மன்ற அலுவலா் மாரிமுத்து நன்றி கூறினாா்.