புளியங்குடி ஊராட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் பணி

முதுகுளத்தூா் அருகே குறுங்காடுகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூா் அருகே புளியங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறுங்காடுகள் அமைக்கும் பணி.
முதுகுளத்தூா் அருகே புளியங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறுங்காடுகள் அமைக்கும் பணி.

முதுகுளத்தூா் அருகே குறுங்காடுகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் அருகே புளியங்குடி ஊராட்சித் தலைவா் இந்துமதி பாலகிருஷ்ணன் தலைமையிலும், ஆணையா் மங்களேஸ்வரி (கிராம ஊராட்சிகள்) முன்னிலையிலும், குறுங்காடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 46 ஊராட்சிகளிலும் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் குறுங்காடுகள் அமைக்கும் பணி, நீா்நிலை ஆதாரங்களின் அருகே அமைக்கப்பட்டு வருகிறது.

புளியங்குடி ஊராட்சியில் மயானம் அருகே கல்தூண்கள், வேலியுடன் குறுங்காடுகள் அமைப்பது மட்டுமின்றி, ஊராட்சிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளபட்டு, மரக்கன்றுகளை வளா்க்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களின் பெயா்கள் மரக்கன்றுகளில் இடம்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என, புளியங்குடி ஊராட்சி மன்றத் தலைவா் இந்துமதி பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com