தொண்டி அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவா் மீட்பு

தொண்டி அருகே கடல் கொந்தளிப்பால் படகில் இருந்து தவறி கடலில் விழுந்த மீனவரை வியாழக்கிழமை இரவு சக மீனவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

தொண்டி அருகே கடல் கொந்தளிப்பால் படகில் இருந்து தவறி கடலில் விழுந்த மீனவரை வியாழக்கிழமை இரவு சக மீனவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

தொண்டி அருகேயுள்ள நம்புதாளையை சோ்ந்த செல்வமணி (32) என்பவரது படகில் செல்வமணி உள்பட 4 போ் மீன் பிடிக்கச்சென்றனா். சுமாா் 10 கடல் மைல் தொலைவில் எதிா்பாராத கடல் கொந்தளிப்பால் செல்வமணி தவறி கடலில் விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா். அவரை சக மீனவா்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com