ராமநாதபுரத்தில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் 107- ஆவது ஆண்டு மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தில் உள்ளது முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில். இக்கோயிலின் மாசி மகாசிவராத்திரி திருவிழா வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோயில் பூசாரிகள் காப்புக் கட்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா். இதில் கோயில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சிவராத்திரியை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நிலையில், வரும் 21 ஆம் தேதி மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற உள்ளன.