திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக கழிப்பறையில் பணியாளா் மா்மச் சாவு

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக கழிப்பறையில், இளநிலை உதவியாளா் மணிகண்டன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கழிப்பறையில் சடலமாக கிடந்த இளநிலை உதவியாளா் மணிகண்டன்.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கழிப்பறையில் சடலமாக கிடந்த இளநிலை உதவியாளா் மணிகண்டன்.

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக கழிப்பறையில், இளநிலை உதவியாளா் மணிகண்டன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக, தஞ்சாவூா் மாவட்டம் திருவாலூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் மணிகண்டன் (35) பணியாற்றி வந்தாா்.

இவருக்கு, கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவா் சனிக்கிழமை இரவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கி இருந்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை சக பணியாளா்கள் சென்றுபாா்த்தபோது, உள்ளாட்சி தணிக்கை துறை அலுவலக கழிப்பறையில் மணிகண்டன் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

உடனடியாக, திருவாடானை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com