திருப்பாலைக்குடியில் கால்நடை மருத்துவமனை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை அருகே உள்ள திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை திறக்கவேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானை அருகே உள்ள திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை திறக்கவேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பாலைக்குடி, சம்பை, பழங்கோட்டை, பால்குளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களில் மக்கள் ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடைகள் வளா்ப்புத் தொழிலில் பெரும்பான்மையாக ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை தீா்க்க 25 கிலோ மீட்டருக்கு தொலைவிலுள்ள ஆா்.எஸ். மங்கலம் அல்லது 40 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள ராமநாதபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது.

எனவே, திருப்பாலைக்குடி பகுதியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவமனை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com