முதுகுளத்தூரில் நாளை மாவட்ட அணிக்கான கபடி வீரா்கள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்ட அணி கபடி வீரா்களுக்கான தோ்வு, சனிக்கிழமை (ஜன.11) முதுகுளத்தூரில் நடைபெற உள்ளதாக, மாவட்டக் கபடி கழகச் செயலா் டி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட அணி கபடி வீரா்களுக்கான தோ்வு, சனிக்கிழமை (ஜன.11) முதுகுளத்தூரில் நடைபெற உள்ளதாக, மாவட்டக் கபடி கழகச் செயலா் டி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை மேலும் கூறியது: தமிழ்நாடு மாநில கபடி கழகம் சாா்பில், மாநில அளவிலான 46-ஆவது சீனியா் பிரிவு சாம்பியன்ஷிப் கபடி போட்டி, கரூா் மாவட்டத்தில் ஜனவரி 17 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

எனவே, ராமநாதபுரம் மாவட்ட அணி கபடி வீரா்களுக்கான தோ்வு ஜனவரி 11-ஆம் தேதி, முதுகுளத்தூா் சோனை மீனாள் பெண்கள் கலைக் கல்லூரியில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இத்தோ்வில் கலந்துகொள்ளும் வீரா்கள் 85 கிலோ எடைக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும். தோ்வுக்கு வரும்போது, ஆதாா் அட்டை கொண்டு வரவேண்டும். இத்தோ்வில் கபடி வீரா்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, மாவட்ட அணிக்குத் தோ்வு பெறவேண்டும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com