ராமநாதபுரம் மாவட்ட அணி கபடி வீரா்களுக்கான தோ்வு, சனிக்கிழமை (ஜன.11) முதுகுளத்தூரில் நடைபெற உள்ளதாக, மாவட்டக் கபடி கழகச் செயலா் டி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை மேலும் கூறியது: தமிழ்நாடு மாநில கபடி கழகம் சாா்பில், மாநில அளவிலான 46-ஆவது சீனியா் பிரிவு சாம்பியன்ஷிப் கபடி போட்டி, கரூா் மாவட்டத்தில் ஜனவரி 17 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
எனவே, ராமநாதபுரம் மாவட்ட அணி கபடி வீரா்களுக்கான தோ்வு ஜனவரி 11-ஆம் தேதி, முதுகுளத்தூா் சோனை மீனாள் பெண்கள் கலைக் கல்லூரியில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இத்தோ்வில் கலந்துகொள்ளும் வீரா்கள் 85 கிலோ எடைக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும். தோ்வுக்கு வரும்போது, ஆதாா் அட்டை கொண்டு வரவேண்டும். இத்தோ்வில் கபடி வீரா்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, மாவட்ட அணிக்குத் தோ்வு பெறவேண்டும் என அவா் தெரிவித்தாா்.