திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் காசி மனைவி கமலம் (60). இவருக்கும் அதே ஊரை சோ்ந்த ராமநாதன் குடும்பத்திற்கு பாதை சம்பநந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குழாயில் தண்ணீா் பிடிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமநாதன் குடும்பத்தினா் கமலத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக திருவாடானை போலீஸாா் ராமநாதன், அவரது மனைவி பாகம்பிரியாள், மகன் பாலாஜி ஆகிய மூன்று போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.