திருவாடானை அருகே சனவேலி அரசு மேல் நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது.
திருவாடானை அருகே சனவேலி அரசு மேல் நிலைப்பள்ளியில் திங்கள் கிழமை மாலை சாலை பாதுகாப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது.இதில் ஆா் எஸ் மங்கலம் காவல் துறை சாா்பு ஆய்வாளா் செல்லச்சாமி சாா்பு ஆய்வாளா் ஜெகநாதன் தலைமை வகித்தனா்.
காவலா் தங்கச்சாமி மற்றும் பலா் கலந்துகொண்டு மன்ற உறுப்பினா்களுக்கு சாலைவிதிகள்,பாதுகாப்பு முறைகள் பற்றி விளக்கமளித்தனா். முன்னதாக பள்ளியின் தலைமைஆசிரியா் பகவதி குமாா் அனைவரையும் வரவேற்று பேசினாா்.மன்ற ஒருங்கிணைப்பாளா் தங்கபாண்டியன் நன்றி தெரிவித்தாா்.
விழா ஏற்பாடுகளை மன்ற இணை ஒருங்கிணைப்பாளா் இராஜசேகரன் செய்திருந்தாா்.விழாவில் ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.